திருகோணமலை பகுதியில் பெரும்போக விளைச்சல் பெரும் பாதிப்பு!

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை நடைபெற்று வருகின்றது.

விளைச்சல் குறைந்துள்ளதால், நெல்லுக்கு உறுதியான விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் டீசல் தட்டுப்பாடு, கூலி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதேவேலை கிண்ணியா சூரங்கல், கற்குழி பிரதேசத்தில் தற்போது இயந்திர அறுவடை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், போதிய உர மானியம் கிடைக்காததால், பல குறைபாடுகள் காணப்படுவதுடன், இம்முறை மஞ்சள் நோய் தாக்கி, விளைச்சல் இல்லாததால், அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் மீது அரசு அக்கறை காட்டி அவர்களுக்கு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.