பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! பரிதாபமாக உயிரிழந்த சோகம் !

கொழும்பு ஓஷன் பல்கலைக்கழகத்தின் (( Ocean University of Colombo)) இறுதியாண்டு மாணவி ஒருவர் நேற்று
(11.02.2023) சிலாபம் கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

60 பேர் கொண்ட குழுவொன்று சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாபம் கடற்கரையில் நீராடச் சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், சடலத்தை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி காணாமல் போன மாணவியைக் கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலபம் பொலிஸார் மற்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.