இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது
இதன் படி இலங்கையில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது .
இலங்கையில் மொத்தமாக 12,700,000 பேர் சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்துள்ள நிலையில் 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்துள்ளனர் அத்துடன் 2082 பெண்கள் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தையும் கொண்டுள்ளனர் என இலங்கை மோட்டார் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வசந்த ஆரியரத்ன கூறியுள்ளார்.