ஆசிரியர் ஒருவரின் தவறான நடத்தையால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பாடசாலை மாணவி.

பாடசாலை ஆசிரியர் ஒருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் வேறு மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவினை பேணி வந்ததுடன் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியரிடம் பயிலும் மாணவி ஒருவர் கல்வி விடயம் தொடர்பாக ஆசிரியரின் வீட்டிற்கு சென்ற வேளை அங்கு ஆசிரியர் இல்லாத போது குறித்த மாணவியை ஆசிரியருடன் தொடர்பினை பேணி வந்த நபர் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

பாதிப்புக்குள்ளான மாணவி நடந்த விடயத்தினை பெற்றோரிடம் கூறியதனை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டத்தில் மேற்கண்ட விடயங்கள் தெரிய வந்துள்ளது இதனையடுத்து மாணவி வழங்கிய முறைப்பாட்டின் படி குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளார் அவரை கடந்த  (20) அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவாரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.