அரச காணியை குத்தகைக்கு விட்ட அரசியல்வாதி கைது!

   புத்தளம், மஹகும்புக்கடலை, பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியினை வெளிநாட்டவர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கிய அரசியல்வாதி ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.

24 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ உள்ளூராட்சி சபையின்ம் 50 வயதினை உடைய முன்னாள் உறுப்பினர்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபப்ட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்