இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெனட்ஸ் தோட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை (24.02.2023) காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுவன் சுரேஷ்குமார் லக்சன் லோகிதன் (வயது 10) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இராகலை கிருஷ்ணன் ஜூனியர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
பதுளை – ஹாலி எல்ல திக்வல தோட்டத்தைச் சேர்ந்த மாணவனின் தாயார் நான்கு மாதங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், தந்தை பதுளையில் வாகனம் திருத்தும் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ஒரே மகனை இராகலை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் ஆச்சியின் பராமரிப்பில் விட்டுச் சென்றுள்ளனர். சிறுவன் காணாமல் போன அன்றைய தினம் மாலை 05 மணியளவில் தனது வழக்கமான சிறப்பு வகுப்புக்கு சென்றுள்ளார்.
எனினும் இரவு வரை சிறுவன் வீடு திரும்பாததையடுத்து சிறுவனின் தந்தை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு சிறுவனை காணவில்லை என இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேநேரம், சிறுவன் வீட்டை விட்டு வெளியேறும் போது நீல நிற ஸ்ட்ரெட்ச் டெனிம் பேண்ட் மற்றும் நீல நிற டி-சர்ட் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் இராகலை காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.