மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

இன்று (26-03-2023) காலை மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் உள்ள வாவியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், பெண்ணின் மரணம் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.