மராட்டிய மாநிலத்தில் உள்ள பேக்கரியில் சமையல் அறையில் கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லஹம்பூர் கிராமத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி (30-03-2023) நடந்தது.
சம்பவம் குறித்து மேலும் அறிய,
பேக்கரி உரிமையாளர் கடந்த 30ம் தேதி தனது 6 வயது மகள் வைஷ்ணவியை பேக்கரிக்கு அழைத்து வந்தார்.
சிறுமி வைஷ்ணவி பேக்கரி சமையலறையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது, சிறுமி சமையலறையில் உள்ள கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் நிலைதடுமாறி விழுந்தார்.
இதில், பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று (02-04-2023) உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.