குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பெண் மாணவிகளும் ஒரு ஆண் மாணவன் என தெரியவந்துள்ளது.

இவர்கள் எலிபடை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயின்று வருகின்றனர் எனவும் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் அத் தோட்ட தொழிலாளர்கள் உடன் முதலுதவி செய்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.