புதிய வைரஸ் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  பலாங்கொடை பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுவார்கள் என சுகாதாரத் துறை கூறுகிறது.

உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்

ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசப் பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.