தனது காதலியை படுகொலை செய்து விட்டு தலைமறைவான காதலன்

 தன்னுடைய காதலியை படுகொலைச் செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன்தப்பியோடி தலைமறைவாகிவிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம், நேற்றையதின கண்டி, பல்லேகல பொலிஸ் பிரிவில் காலபுர நத்தரம்பொத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபருக்கு வலைவீச்சு

சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்​ணே இவ்வாறு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.