பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக  பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு (IHC) வெளியே அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) தலைவர் இம்ரான் கானை ரேஞ்சர்கள் இன்று  கைது செய்ததாக  தெரிவிக்கபப்ட்டுள்ளது..

இம்ராகானை கைது செய்த   ரேஞ்சர்கள் அவரை கவச காரில் அழைத்துச் சென்றனர்.   இந்நிலையில்    நீதிமன்ற வளாகத்தில் இருந்து இம்ரானை கைது செய்ததற்காக உள்துறை செயலாளருக்கு IHC சம்மன் அனுப்பியுள்ளதாக  பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.