பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கான எச்சரிக்கை!

பேரூந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களுக்கு போதை பொருள் கொடுத்து தங்கப் பொருட்களை திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 4 போதை மாத்திரைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.