தோட்டத்தில் பணிபுரிந்த முதியவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

நானுஓயா – பங்கலாவத்தை பகுதியில் வீதியோரத்திலுள்ள விவசாய நிலத்தில் பணிப்புரிந்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

70 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய காணியிலிருந்து பணிபுரிந்துக்கொண்டிருந்த நிலையில் தவறுதலாக தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் தவறி வீழ்ந்தமையினால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.