காதல் தோல்வி அடைந்ததால் விபரீத முடிவெடுத்த பட்டதாரி பெண்!

 மட்டக்களப்பில் பாட்சாலைக் காலத்தில் ஆரம்பித்த   காதல்  பல்கலைக்கழகத்தில்  தோல்வியடைந்ததால் 23 வயது இளம் பட்டதாரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பட்டதாரி பெண் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிறை பலனின்றி நேற்றியதினம் ஞாயிற்றுக்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.

பாடசாலைக்கால காதல்

சம்பவத்தில் 23 வயதுடைய கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். காதல் தோல்வி காதல் தோல்வி காரணமாக இப்பட்டதாரி மாணவி அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே பாடசாலையில் ஒரே தரத்தில் கல்வி கற்றுவந்த இருவரும் பாடசாலை காலத்தில் இருந்தே காதலித்துவந்ததாக கூறப்படுகின்றது.

தொடர்ந்து இருவரும் பல்கலைக்கழகம் தெரிவான நிலையில் காதல் நிலை அறிந்த இரு தரப்பு பெற்றோர்களும் பல்கலை படிப்பு நிறைவுற்றதும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளதாகவும் 2கூறப்படுகின்றது.

இந்நிலையில் பல்கலைக்கழகம் சென்றதன் பின்னர் காதலனின் மனமாற்றம் காரணமாக மனமுடைந்த யுவதி , அதிகளவான மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.