வெளிநாடொன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் பரிதாப மரணம்!

     ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டாரில் நேற்றையதினம் (27) இடம்பெற்ற விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே   உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனத்தில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.