உள்ளூர் சந்தையில் தேங்காய் ஜஸ்கிறீம் உற்பத்தி!

உள்ளுர் சந்தையில் தேங்காய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வுக்கு பிறகு தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னைச் செய்கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுவின் பால் அல்லது பிற பால் பொருட்களைப் பயன்படுத்தாமல் நூறு சதவிகிதம் தேங்காய் அடிப்படையிலான ஆரோக்கியமான இனிப்புப் பொருளாக இந்த தயாரிப்பு தயாரிக்கப்படலாம் என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.