பாடசாலை தொடர்பான அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் (06) நாளையும் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விடுமுறை இரண்டு தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலீடாக காலநிலை சீரடைந்ததன் பின்னர் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என ஹட்டன் கல்வி வலயக் கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.