அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாடு எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெறவுள்ளது. 

இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.