காதல் உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவெடுத்த மாணவி!

தொம்பகஹவெலவில் காதல் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பிரதேசத்தில் வசிக்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.