சனல் 4 இக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ராஜபக்ஷக்கள் மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி காணொளியை ஒளிபரப்பி இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் செனல் 4 இன் நடவடிக்கை எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (7) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மேலும் ஆர்ப்பாட்டகாரகளால் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.