19வயது மனைவியை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!

மொனராகலையில் தன்னுடைய மனைவியை காணவில்லை என கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனராகலையில் புத்தல யுதஹாநாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய 19 வயதான மனைவியே செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் 28 வயதான கணவன் செப்டெம்பர் 28ஆம் திகதியன்று முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் முறைப்பாடு

வீட்டிலிருந்து வெளியே சென்று மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மனைவி வீட்டில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அக்கம் பக்கத்து வீடுகளில் தேடி பார்த்தபோதும் அங்கும் அவர் இருக்கவில்லை என்று தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவி காணாமல் போயிருந்தாலும் வீட்டுக்குத் திரும்புவாள் என காத்திருந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.