விசாரணைக்கு வரும் சாந்தனின் வழக்கு

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகும் திருச்சியில் தனியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

விடுதலையான பிறகும் தனது மகன் தொடர்ந்து சிறையில் இருப்பதாக சாந்தனின் தாயார் கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சிடம் மனு தாக்கல் செய்துள்ளதாக சாந்தனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலையான தனது மகனை நாட்டுக்கு அழைத்து வருமாறு பல்வேறு தரப்பினரிடமும் யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மனு கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது