நிர்வாண புகைப்பட மோசடி தொடர்பில் விசாரணை

02 முதல் 07 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் சில பாலியல் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் விற்பனை செய்யும் மோசடி தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குழுவினால் மேற்கொள்ளப்படும் இந்த மோசடி மூலம் 1,000 ரூபாவில் இருந்து பல்வேறு விலைகளில் படங்கள் மற்றும் காணொளி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோசடியாளர்கள் இதை மிக நுணுக்கமாகச் செய்வதால் குழந்தைகளை எப்படி, எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்றதாக கூறப்படும் பண்டாரவளை சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரை பெற்றோர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.