இன்றைய வானிலை

இலங்கையில், பல பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழைப் பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பலாங்கொடை – ஹட்டன் வீதி, மாரதென்ன பகுதியில் தாழிறங்கியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலாங்கொடை – ஹட்டன் வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.