தமிழக அகதி முகாமில் வசிக்கும் இலங்கையர்கள் உட்பட இந்தியர்களுக்கும் உதவும் தியாகி

இந்தியாவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட, தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் நேற்றையதினம் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். 450 பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் சுமார் 750 இந்திய குடும்பங்களுக்கும், இந்திய ரூபா ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மொத்தம் 1200 பேருக்கு 50 இலட்சம் பெறுமதியான உலருணவுப் பொதிகள் தியாகியின் நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது யாழ்ப்பாண வர்த்தகர் திரு.சுதன் அவர்களும் உடனிருந்தார்.