தொடருந்தில் மோதுண்ட யுவதி உயிரிழப்பு!

பதுளை மாவட்டத்தின் எல்ல – ஒன்பது வளைவு பாலத்துக்கு அருகில் இன்று காலை தொடருந்தில் மோதுண்டு யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிதுல்எல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கில் பயணித்த தொடருந்திலேயே அவர் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதியின் சடலம் தெமோதரை தொடருந்து நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.