நீரில் மூழ்கியுள்ள கொழும்பு ஆமர் வீதி!

 நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.