ஆற்றில் இருந்து சிசு ஒன்றின் சடலம் ஒன்று மீட்பு!

பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து, பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிசுவின் தாய் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.