சிறைச்சாலையில் தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

போதைப்பொருள் பாவனையாளர்கள், அதிகரித்துள்ளமையினால் சிறைச்சாலைகளில் தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களங்களத்தின் சுகாதார பிரிவு அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர், ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், அவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்