சிறைச்சாலையில் நோய் தொற்று அதிகரிப்பு!

போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்களை கைதுசெய்து சிறையிலடைக்கும் நடவடிக்கை அதிகரித்து வருவதால் சிறைச்சாலைகளில் தொற்று நோய் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய ஹேமன்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமை

போதைப் பொருளுக்கு அடிமையாகிய கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துள்ளதன் காரணமாக அவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மூளை காய்ச்சல் நோயால் ஒரு கைதி மரணித்தமை உறுதிப்படுத்தப்பட்டதால் காலி சிறைச்சாலை நடவடிக்கைகள் மட்டுப்படுத்த சுகாதார பரிந்துரைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் காலி சிறைச்சாலையில் காய்ச்சல் நோய் அறிகுறி காட்டிய 8 கைதிகளை கராபிட்டிய வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.