100ஆவது நாளாக தொடரும் மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களினால் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தின் 100ஆவது நாளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டமானது இன்று (16.01.2024) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவருகின்றது.

இதன் போது பண்ணையாளர்கள் பொங்கல் பானையில் கறுப்பு நிற துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டடு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாய அமைப்பினர்

மேலும், இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பிலுள்ள பண்ணையாளர்கள், விவசாய அமைப்பினர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டடு வருகின்றனர்.