பல்கலை விரிவுரையாளர் திடீர் மரணம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

60 வயதுடைய விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான லக்நாத் பீரிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகமான மாத்திரைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உடலில் பரவியதால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர் தனது மனைவியுடன் பழைய கலஹா வீதி சரசவி உயன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்