கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பை சுத்தம் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி!

  கொழும்பு பொரளை, செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கழிவறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு வகையான துப்பாக்கிகளின் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பு வளாகத்தை துப்பரவு செய்யும்போது T56 துப்பாக்கிகள் மற்றும் M16 துப்பாக்கிகளின் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீவிர விசாரணையில் பொலிஸார்

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், கொழும்பு மாநகர சபை ஊழியர்களுடன் சேர்ந்து, அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான கழிவறை அமைப்பை சுத்தம் செய்துள்ளனர்.

இதன் போதே தோட்டாக்களை அவதானித்து பொரளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தோட்டாக்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாங்கள் சில காலங்களுக்கு முன்னர் யாரேனும் புதைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.