கொழும்பில் பாரிய ஆர்ப்பாடம் முன்னெடுப்பு!

  ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் (30) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஹைட் பார்க் மைதானம் மற்றும் பஞ்சிகாவத்தையில் இன்று(30) பிற்பகல் 2.00 க்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.