பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பமாகி உள்ளது.

சுதந்திர தினம் விடுமுறை நாளில் கொண்டாடப்பட்டதால் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக போலி பிரசாரங்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்றைய தினம் அரச விடுமுறை தினம் இல்லையென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது

விவசாய பாடத்திற்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதையடுத்து, அந்த பாடத்திற்கான பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதற்கமைய, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன. அதனை அடுத்து நாடளாவிய ரீதியில் இன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகி உள்ளது.

 இந்நிலையில், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று வழமை போல இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.