பல்கலைக்கழக மாணவர்களின் நிர்வாண காணொளி வெளியானதில் பதற்றம்!

பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளது நிர்வாண காணொளிகளை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் ருலபனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பேக்கரி கடையொன்றை நடத்தி செல்லும் 20 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 உரிமையாளரின் மகன் மீது  முறைப்பாடு 

பாதிக்கப்பட்ட இரு பெண்களும் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் குளியறையில் கையடக்கத்தொலைபேசி ஒன்று வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவி இது தொடர்பில் விடுதியின் பெண் உரிமையாளரிடம் விசாரித்துள்ள நிலையில் சந்தேக நபரான உரிமையாளரின் மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்ள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.