பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் பரிதாப மரணம்!

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மகாவலி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளான மாணவரே இன்று (04.03.2024) உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த 23ஆம் திகதி நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், மகாவலி கங்கையின் கல்பொத்தவல என்ற இடத்தில் அவர் நீராடச் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது மாணவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் மாணவனை கரைக்கு கொண்டு வந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ மாணவரான இசுரு மதுஷான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.