பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு!

பிரதி பொலிஸ்மா அதிபர்  டி.சி.ஏ.  தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக  பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபால தற்போது பொலிஸ் விசேட பணியகத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.