நாட்டு மக்களின் உயிரை பறிக்கும் அரச பேருந்து!

நாடாளாவிய ரீதியில் அண்மைக்காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டிகளால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

இவ்வாறான விபத்துக்களால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டன.

இதன்போது பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எத்தனையோ விபத்துக்கள இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.