காதலியை பொலிசாரிடம் சிக்க விட்டு தப்பி ஓடிய காதலன்!

காதலனுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருனை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் காதலன் தப்பியோடியதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் விலத்வவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலன் தப்பியோட்டம்

குறித்த யுவதி தனது காதலனுடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் சில காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தும்மலசூரிய விலத்தாவ வீதியில் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சோதனையிட்டபோதே அவர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான காதலனைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.