இலங்கை வானிலையில் ஏற்ப்படப் போகும் மாற்றம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் உட்பட சில இடங்களில் இன்று (06) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இன்றையதினம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களின் மாத்தளை, மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் என்று வெப்ப சுட்டெண் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ஆலோசனையின்படி, இந்த வெப்பநிலை நிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்படுதல் மற்றும் செயல்பாட்டின் மூலம் சோர்வு சாத்தியமாகும், அதே நேரத்தில் தொடர்ந்து செயல்படுவதால் வெப்ப பிடிப்புகள் ஏற்படலாம்.

மேலும், சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.  

அதற்கிணங்க இன்று (06) நண்பகல் 12.12 அளவில் லெல்லோப்பிட்டி, பலாங்கொடை, புலத்சிங்கள, கல்தோட்டை மற்றும் வாத்துவை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.