நாட்டின் தங்க கையிருப்பு அதிகரிப்பு!

2024 மார்ச் மாதத்தில் நாட்டில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 31 மில்லியன் டொலர்களில் இருந்து 34 மில்லியன் டொலர்களாக 9.1% அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 2024 பெப்ரவரி மாத இறுதியில் 4.52 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு, 2024 மார்ச் இறுதிக்குள் 4.95 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

அதன்படி, மார்ச் மாதத்தில் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 9.5% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி
இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பிரதானமாக அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் மாதத்தில் 9.6% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பெப்ரவரி மாத இறுதியில் $4.48 பில்லியன் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 2024 இறுதியில் $4.91 பில்லியனாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.