மாணவியுடன் குடும்பம் நடாத்திய ஆசிரியர் கைது!

புத்தல கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் விளையாட்டு ஆசிரியர் கைதாகியுள்ளார்.

சந்தேக நபர் புத்தல யுத்கனாவ காலனியில் வசிக்கும் 33 வயதுடையவர். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமிக்கு 15 வயதாக இருந்தபோது காதல் உறவைப் பேணி வந்துள்ளார்.

விஷத்தை குடித்த மாணவி
இதனை அறிந்த சிறுமியின் தந்தை இந்த காதல் உறவை நிறுத்துமாறு எச்சரித்ததன் காரணமாக 04/04/2024 அன்று சிறுமி ஒருவித விஷத்தை குடித்து தற்போது மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்களது நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் விசாரணையின் போது பாடசாலையின் விளையாட்டு ஆசிரியருடன் இவர்கள் கணவன் மனைவி போன்று பல சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டதாக பொலிஸார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன