பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதியில் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் பண்டாரகமவில் வசிக்கும் 25 வயதுடைய மாணவன் இன்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சிங்கராஜா விடுதிக்குள் ஹர்ஷ தனஞ்சய என்ற மாணவர் உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.