மோட்டார்சைக்கிளில் முகம் சுழிக்கவைத்த காதல் ஜோடி கைது !

மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கியின் மீது இளம்பெண் ஒருவர் அமர்ந்து இளைஞரை கை, கால்களால் கட்டிப்பிடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதல் ஜோடி பயணம் செய்யும் காட்சியை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதால், அந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் விசாகப்பட்டினம் அருகே உள்ள சமாதானநகரை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விசாகப்பட்டினம் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.