வவுனியா நகர் முழுவதும் எரிபொருள், பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி சுவரொட்டிகள்!!

எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையை உடனடியாக குறை” என்ற வாசகத்தினை தாக்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டியில் பயிர்களுக்கு ஏற்ற உரத்தை உடனே வழங்கு என்ற வாசகமும் இணைக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜெ.வி.பி) என உரிமையும் கோரப்பட்டுள்ளமையுடன், சுவரொட்டிகள் கண்டி வீதி, நூலக வீதி, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி என வவுனியா நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.