கொரோனா தொற்றினால் மேலும் 48 பேர் மரணம்!

இலங்கையில் நேற்று (26) கொரோனா தொற்றால் 48 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 28 ஆண்களும், 20 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் கடந்த ஐந்து தினங்களில் 236 பேர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

அதற்கைமய, கடந்த 22 ஆம் திகதி 43 மரணங்களும், 23 ஆம் திகதி 52 மரணங்களும், 24 ஆம் திகதி 45 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன், கடந்த இரு நாட்களில் தலா 48 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.