நிலநடுக்கத்தினால் இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் மட்டக்களப்பில் இருந்து 1,300 கி.மீ தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இருப்பினும் நாட்டின் கரையோரத்தில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.