மேலும் ஒருதொகுதி சைனோபாம் தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

நாட்டுக்கு மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 14.7 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இதுவரை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.